
Quran in Tamil
Ad-Dhuhâ
அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[93:1]
முற்பகல் மீது சத்தியமாக
[93:2]
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
[93:3]
உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
[93:4]
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
[93:5]
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
[93:6]
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
[93:7]
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
[93:8]
மேலும், அவன் உம்மைத்தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
[93:9]
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
[93:10]
யாசிப்போரை விரட்டாதீர்.
[93:11]
மேலும், உம்முடைய இறைவனின்அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.