Quran translations in many languages

Quran in Tamil

Ad-Dukhân

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[44:1]

ஹாமீம்.

[44:2]

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!

[44:3]

நிச்சயமாகநாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.

[44:4]

அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.

[44:5]

அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.

[44:6]

(அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்நிச்சயமாகஅவன் (யாவற்றையும்)செவியேற்பவன்நன்கறிபவன்.

[44:7]

நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின்வானங்கள்பூமிஇவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).

[44:8]

அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்அவனே மரிக்கச் செய்கிறான்அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.

[44:9]

ஆனால்அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

[44:10]

ஆகவேவானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.

[44:11]

(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; “இது நோவினை செய்யும் வேதனையாகும்.

[44:12]

எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் (எனக் கூறுவர்).

[44:13]

நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.

[44:14]

அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) “கற்றுக் கொடுக்கப்பட்டவர்பைத்தியக்காரர்” எனக் கூறினர்.

[44:15]

நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால்பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.

[44:16]

ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.

[44:17]

அன்றியும்நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்கண்ணியமான தூதரும்அவர்களிடம் வந்தார்.

[44:18]

அவர் (கூறினார்😉 “என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.

[44:19]

அன்றியும், “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.

[44:20]

அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான்என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.

[44:21]

மேலும்நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளங்கள் (என்று மூஸா கூறினார்).

[44:22]

(அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்).“நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளானசமூகத்தாராகவே இருக்கிறார்கள்” என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.

[44:23]

என் அடியார்களை (அழைத்து)க் கொண்டுஇரவில் நீர் (வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள் (என்று இறைவன் கூறினான்.)

[44:24]

அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும்நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி” இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).

[44:25]

எத்தனை தோட்டங்களையும்நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?

[44:26]

இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).

[44:27]

இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).

[44:28]

அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.

[44:29]

ஆகவேஅவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.

[44:30]

நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;

[44:31]

ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்) நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாகவரம்பு மீறியவனாக இருந்தான்.

[44:32]

நிச்சயமாகநாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.

[44:33]

அன்றியும்நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.

[44:34]

நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்;

[44:35]

எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்.

[44:36]

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்.

[44:37]

இவர்களும் மேலாஅல்லது ‘துப்பஉ சமூகத்தார்களும்அவர்களுக்கு முன்னருந்தவர்களுமாநிச்சயமாக அவர்கள்பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.

[44:38]

மேலும்வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.

[44:39]

இவ்விரண்டையும்சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

[44:40]

நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.

[44:41]

ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

[44:42]

(எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோஅவர்களைத் தவிர – நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்மிக்ககிருபையுடையவன்.

[44:43]

நிச்சயமாகஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).

[44:44]

பாவிகளுக்குரிய உணவு

[44:45]

அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்வயிறுகளில் அது கொதிக்கும்.

[44:46]

வெந்நீர் கொதிப்பதைப் போல்.

[44:47]

அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.

[44:48]

பின்னர்அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.

[44:49]

நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும்சங்கையுடையவனாகவும் இருந்தாய்!

[44:50]

நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்” (என்று அவர்களிடம் சொல்லப்படும்).

[44:51]

பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்றஇடத்தில் இருப்பார்கள்.

[44:52]

சுவனச் சோலைகளிலும்நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).

[44:53]

ஸுன்துஸ்இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள்பீதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.

[44:54]

இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

[44:55]

அச்சமற்றவர்களாகசகலவிதக்கனிவகைகளையும்அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.

[44:56]

முந்திய மரணத்தைத் தவிரஅங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.

[44:57]

(இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும்.

[44:58]

அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காகஇதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.

[44:59]

ஆகவேநீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.