Quran translations in many languages

Quran in Tamil

Adh-Dhâriyât

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[51:1]

(புழுதிகளை எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!

[51:2]

(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,

[51:3]

பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,

[51:4]

(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக

[51:5]

நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.

[51:6]

அன்றியும், (நன்மைதீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.

[51:7]

அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!

[51:8]

நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.

[51:9]

அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.

[51:10]

பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.

[51:11]

வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.

[51:12]

(நன்மைதீமைக்குக்) “கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.

[51:13]

நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).

[51:14]

உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோஇதுதான்.

[51:15]

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும்நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.

[51:16]

அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.

[51:17]

அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.

[51:18]

அவர்கள் விடியற் காலங்களில்(பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.

[51:19]

அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும்வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.

[51:20]

உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

[51:21]

உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?

[51:22]

அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.

[51:23]

ஆகவேவானங்கள்பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக் கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.

[51:24]

இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?

[51:25]

அவர்கள்அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; “உங்களுக்கு) “ஸலாம்‘ என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).

[51:26]

எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்றுஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.

[51:27]

அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார்.

[51:28]

(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்படடது, “(இதனை அறிந்த) அவர்கள்பயப்படாதீர்!” எனக் கூறினார்அன்றியும்அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.

[51:29]

பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்துதம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.

[51:30]

(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,)நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.

[51:31]

(பின்னர் இப்றாஹீம்;) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார்.

[51:32]

குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.

[51:33]

அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-

[51:34]

வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.

[51:35]

ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.

[51:36]

எனவேஅதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிரஒருவரையும் நாம் காணவில்லை.

[51:37]

நோவினை தரும் வேதனையை அஞசுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சிளை விட்டு வைத்தோம்.

[51:38]

மலும்மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது

[51:39]

அவன் தன் (ஆட்சிசெல்வம்படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து; “இவர் ஒரு சூனியக்காரர்அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.

[51:40]

ஆகவேநாம் அவனையும்அவனுடையபடைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்அவன் நிந்தனைக்கும் ஆளாகிவிட்டான்.

[51:41]

இன்னும், ‘ஆது‘ (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது)நாம் அவர்கள் மீது (நாசம்விளைவிக்கக் கூடிய) மலட்டுக் காற்றை அனுப்பியபோது

[51:42]

(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.

[51:43]

மேலும் ஸமூது‘ (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); “ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது

[51:44]

அவர்கள் தங்கள் இறைவனுடைய கடடளையை மீறினார்கள்அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.

[51:45]

ஆகவேஅவர்கள் நிற்கவும் சக்திபெற்றார்களில்லை (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.

[51:46]

அன்றியும்இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக)நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.

[51:47]

மேலும்நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.

[51:48]

இன்னும்பூமியை – நாம் அதனை விரித்தோம்எனவேஇவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.

[51:49]

நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.

[51:50]

ஆகவேஅல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்நிச்சயமாகநான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).

[51:51]

மேலும்அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்நிச்சயமாகநான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே – இருக்கின்றேன் (என்றும் கூறும்).

[51:52]

இவ்வாறேஇவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம்அவர்கள் (அவரை) சூனியக்காரர்அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.

[51:53]

இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொண்டனராஅன்றுஅவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.

[51:54]

ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.

[51:55]

மேலும்நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில்நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.

[51:56]

இன்னும்ஜின்களையும்மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

[51:57]

அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.

[51:58]

நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்பலம் மிக்கவன்உறுதியானவன்.

[51:59]

எனவேஅநியாயம் செய்து கொண்டிருப்போருக்குஅவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல்ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னைஅவசரப்படுத்த வேண்டாம்.

[51:60]

ஆகவேகாஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில்கேடுதான்.