Quran translations in many languages

Quran in Tamil

Al-Anbiyâ’

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[21:1]

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.

[21:2]

அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய நினைவூட்டுதல் வரும்போது அவர்கள் விளையாடியவர்களாக அதை செவி மடுக்கிறார்களே தவிர வேறில்லை.

[21:3]

அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாகஇவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?” என்று கூறிக்கொள்கின்றனர்.

[21:4]

என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான் என்று அவர் கூறினார்.

[21:5]

அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்” இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக்கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர்.

[21:6]

இவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட எந்த ஊ(ரா)ரும் ஈமான் கொள்ளவில்லை அவ்வாறிருக்க இவர்கள் ஈமான் கொள்வார்களா?

[21:7]

(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து)கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).

[21:8]

அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.

[21:9]

பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்அவ்வாறு நாம் அவர்களையும்நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.

[21:10]

உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா?

[21:11]

மேலும்அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம்அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம்.

[21:12]

ஆகவேஅவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோதுஅவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.

[21:13]

விரைந்து ஓடாதீர்கள்நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும்உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).

[21:14]

(இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.

[21:15]

அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.

[21:16]

மேலும்வானையும்பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.

[21:17]

வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.

[21:18]

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டுஅசத்தியத்தின் மீது வீசுகிறோம்அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவேநீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.

[21:19]

வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்சோர்வடையவுமாட்டார்கள்.

[21:20]

இடைவிடாமல் அவர்கள் இரவிலும்பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

[21:21]

பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே! அவை (இறந்தோரை) உயிர் கொடுத்து எழுப்புமா?

[21:22]

(வான்பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ்அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.

[21:23]

அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால்அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.

[21:24]

அல்லதுஅவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? “அப்படியாயின்உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்இதோ என்னுடன்இருப்பவர்களின் வேதமும்எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன” என்று நபியே! நீர் கூறும்ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்.

[21:25]

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை எனவேஎன்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீஅறிவிக்காமலில்லை.

[21:26]

அவர்கள்; “அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.

[21:27]

அவர்கள் (எந்க ஒரு பேச்சையும்) அவனை முந்திப் பேச மாட்டார்கள்அவர்கள் அவன் கட்டளைப் படியே (எதையும்) செய்கிறார்கள்.

[21:28]

அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும்அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி – அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ள அச்சத்தால்நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.

[21:29]

இன்னும்அவர்களில் எவரேனும் “அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்” என்று கூறுவாரேயானால்அ(த்தகைய)வருக்கு – நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் – இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.

[21:30]

நிச்சயமாக வானங்களும்பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும்இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும்உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?

[21:31]

இன்னும்இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டுநாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டுநாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.

[21:32]

இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.

[21:33]

இன்னும் அவனே இரவையும்பகலையும்சூரியனையும்சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.

[21:34]

(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் எனறென்றும் வாழப் போகிறார்களா?

[21:35]

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச்சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம்உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

[21:36]

இன்னும் (நபியே!) காஃபிர்கள் உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் (குறை) கூறுபவர்இவர்தானா?” – என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை மேலும் அவர்கள் ரஹ்மானுடைய நினைவை நிராகரிக்கின்றனர்.

[21:37]

மனிதன் அவசரக்காரனாகவேபடைக்கப்பட்டிருக்கின்றான்விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளைஉங்களுக்குக் காண்பிப்பேன்ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.

[21:38]

நீங்கள் உண்மையாளர்களாகயிருப்பின்இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது(நிறைவேற்றப்படும்)என்று அவர்கள் கேட்கிறார்கள்.

[21:39]

தம் முகங்களையும்தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)

[21:40]

அவ்வாறல்ல! அது அவர்களிடம் திடீரென வந்துஅவர்களைத் தட்டழியச் செய்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள அவர்களால் இயலாது அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.

[21:41]

இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப்ப பட்டார்கள் – ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்நது கொண்டது.

[21:42]

உங்களைஇரவிலும்பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக்கூடியவர் எவர்என்று (நபியே!) நீர் கேளும்ஆனால்அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.

[21:43]

அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவாஅவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.

[21:44]

எனினும்இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும்அவர்களுடைய ஆயுட் காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம். நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையாஇவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?

[21:45]

நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான் என்று(நபியே!) நீர் கூறும்எனினும்செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.

[21:46]

உம்முடைய இறைவனிடமிருந்துள்ளவேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், “எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.

[21:47]

எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது மேலும் (நன்மைதீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும்அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.

[21:48]

இன்னும்நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும்நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.

[21:49]

அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள்இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்.

[21:50]

இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?

[21:51]

இன்னும்நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் – அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.

[21:52]

அவர் தம் தந்தையிடமும்தம் சமூகத்தாரிடமும்நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது

[21:53]

அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.

[21:54]

(அதற்கு) அவர், “நிச்சயமாக நீங்களும்உங்களுடைய மூதாதையவரும் – பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள் என்று கூறினர்.

[21:55]

(அதற்கு) அவர்கள் “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீராஅல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?” என்று கேட்டார்கள்.

[21:56]

அப்படியல்ல. உங்களுடைய இறைவன்வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்இதற்குச்சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்று (இப்ராஹீம்) கூறினார்.

[21:57]

இன்னும்நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர்அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்! (என்றும் கூறினார்.)

[21:58]

அவ்வாறே அவர்அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).

[21:59]

எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான் என்று கூறினார்கள்.

[21:60]

அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.

[21:61]

அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு என்று சொன்னார்கள்.

[21:62]

இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோஎன்று (அவர் வந்ததும்) கேட்டனர்.

[21:63]

அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதேஇது தான் செய்திருக்கும்எனவேஇவை பேசக்கூடியவையாக இருப்பின்இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.

[21:64]

(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்)நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்” என்று பேசிக் கொண்டார்கள்.

[21:65]

பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).

[21:66]

(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள் என்று கேட்டார்.

[21:67]

சீச்சீ! உங்களுக்கும்நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா? (என்று இப்ராஹீம் கூறினார்).

[21:68]

(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

[21:69]

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்)நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும்சுகமளிக்கக் கூடியதாகவும்ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.

[21:70]

மேலும்அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!

[21:71]

இன்னும்நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான – பாக்கியமுள்ள – பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.

[21:72]

இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும்மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.

[21:73]

இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக – தலைவர்களாக – நாம் அவர்களை ஆக்கினோம்மேலும்நன்மையுடைய செயல்களைக் புரியுமாறும்தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும்ஜகாத்தை கொடுத்து வருமாறும்நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் – அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.

[21:74]

இன்னும்லூத்தையும் (நபியாக்கி) – நாம் அவருக்கு ஞானத்தையும்கல்வியையும் கொடுத்தோம்அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும்பெரும்பாவிகளாகவும் இருந்தனர்.

[21:75]

இன்னும்அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.

[21:76]

இன்னும்நூஹ் – அவர் முன்னே பிரார்த்தித்தபோதுஅவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்அவரையும்அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.

[21:77]

இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர் – ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.

[21:78]

இன்னும் தாவூதும்ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போதுஅதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போதுஅவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.

[21:79]

அப்போதுநாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்மேலும்அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்அவை (தாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன – இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.

[21:80]

இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதைஅவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் – எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?

[21:81]

இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அதுஅவருடைய ஏவலின் படிநாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறுஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவேஇருக்கின்றோம்.

[21:82]

இன்னும்ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம்வசப்படுத்திக் கொடுத்தோம்இது தவிர) மற்றி வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்.

[21:83]

இன்னும்ஐயூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது (இறைவனே!) கிருபைசெய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித் போது,

[21:84]

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்அவருடைய குடும்பத்தையும்பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் – இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.

[21:85]

இன்னும்இஸ்மாயீலையும்இத்ரீஸையும்துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!

[21:86]

இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம்நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!

[21:87]

இன்னும் (நினைவு கூர்வீராக)துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார் எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்தஇருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லைநீமிகவும் தூய்மையானவன்நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.

[21:88]

எனவேநாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.

[21:89]

இன்னும் ஜகரியா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோஅனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித் போது

[21:90]

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி)சுகப்படுத்திஅவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்நிச்சயமாக இவர்கள் யாவரும்நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் – இன்னும்அவர்கள் நம்மை ஆசைகொண்டும்பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும்அவர்கள் நம்மிடம் உள்ளச்சம்கொண்டவர்களாக இருந்தார்கள்.

[21:91]

இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும்நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும்அவர் புதல்வரையும் அகிலத்தாருக்குஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.

[21:92]

நிச்சயமாக உங்கள் உம்மத்து‘ – சமுதாயம் – (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால்என்னையே நீங்கள் வணங்குங்கள்.

[21:93]

(பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.

[21:94]

எனவேஎவர் முஃமினாகநல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.

[21:95]

நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.

[21:96]

யஃஜூஜுமஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போதுஅவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.

[21:97]

(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்😉 “எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; – அது மட்டுமில்லை – நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்” (என்று கூறுவார்கள்).

[21:98]

நிச்சயமாக நீங்களும்அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.)

[21:99]

இவை தெய்வங்களாக இருந்திருந்தால், (அந் நரகத்திற்கு) வந்து சேர்ந்திருக்க மாட்டா இன்னும்அனைவரும் அதில் நிரந்தரமாயிருப்பர்.

[21:100]

அதில் அவர்களுக்கு வேதனை முனக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் அதிலே (எதனையும்) செவியுறமாட்டார்கள்.

[21:101]

நிச்சயமாகஎவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோஅவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.

[21:102]

(இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.

[21:103]

(அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாதுமலக்குகள் அவர்களைச் சந்தித்துஉங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்).

[21:104]

எழுதப்பட்ட ஏடுகளைச் சருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே!நினைவூட்டுவீராக!)முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனைமீட்டுவோம்இது நம் மீது வாக்குறுதியாகும்நிச்சயமாக நாம் இதனை செய்வோம்.

[21:105]

நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

[21:106]

வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது.

[21:107]

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.

[21:108]

எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்; ‘உங்கள் நாயன் ஒரே நாயன் தான்‘ என்பதுதான்ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா? (என்று நபியே!) நீர் கேட்பீராக!

[21:109]

ஆனால்அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின்நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்துவிட்டேன்இன்னும்உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட (வேதனையான)து சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் சொல்லிவிடுவீராக.

[21:110]

வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்நீங்கள் (இருதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (என்றும்)

[21:111]

இந்த தாமதம் உங்களுக்கு சோதனையாகவும் குறிப்பட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதற்காகவும் இருக்குமா என்பதை நான் அறியமாட்டேன்.

[21:112]

என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அளவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்.