Quran translations in many languages

Quran in Tamil

Al-Balad

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[90:1]

இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

[90:2]

நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,

[90:3]

பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

[90:4]

திடமாகநாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.

[90:5]

ஒருவரும்தன் மீது சக்தி பெறவே மாட்டார்‘ என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

[90:6]

ஏராளமான பொருளை நான் அழித்தேன் என்று அவன் கூறுகிறான்.

[90:7]

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?

[90:8]

அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?

[90:9]

மேலும் நாவையும்இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?

[90:10]

அன்றியும் (நன்மைதீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

[90:11]

ஆயினும்அவன் கணவாயைக் கடக்கவில்லை.

[90:12]

(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.

[90:13]

(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-

[90:14]

அல்லதுபசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.

[90:15]

உறவினனான ஓர் அநாதைக்கோ,

[90:16]

அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).

[90:17]

பின்னர்ஈமான் கொண்டுபொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும்கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.

[90:18]

அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.

[90:19]

ஆனால்எவர்கள் நம் வசனங்களைநிராகரிக்கிறார்களோஅவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.

[90:20]

அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.