Quran translations in many languages

Quran in Tamil

Al-Bayyinah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[98:1]

வேதக்காரர்களிலும்முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோஅவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.

[98:2]

(அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர்அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).

[98:3]

அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

[98:4]

எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.

[98:5]

அல்லாஹ்வுக்கு வணக்கத்தைதூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்)பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர(வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.

[98:6]

நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் – அதில் என்றென்றும் இருப்பார்கள் – இத்தகையவர்கள்தாம்படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.

[98:7]

நிச்சயமாகஎவர்கள் ஈமான் கொண்டுஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோஅவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள்.

[98:8]

அவர்களுடைய நற்கூலிஅவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்அல்லாஹ்வும் அவர்களைப் பற்றிதிருப்தி அடைவான்அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரேஅத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.