Quran in Tamil Al-Fîl அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.[105:1](நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?[105:2]அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?[105:3]மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.[105:4]சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.[105:5]அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.