Quran translations in many languages

Quran in Tamil

Al-Furqân

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[25:1]

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும்அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்கபாக்கியமுடையவன்.

[25:2]

(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள்பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்துஅவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.

[25:3]

(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் – அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்தங்களுக்கு நன்மை யெ;து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோமறிக்கச் செய்யவோமீண்டும் உயிர் கொடுத்துஎழுப்பவோஇயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.

[25:4]

இன்னும்இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும்பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.

[25:5]

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; “இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் – ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும்ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.

[25:6]

(நபியே!) “வானங்களிலும்பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும்மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவீராக!

[25:7]

மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; “இந்த ரஸூலுக்கு என்னஇவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காகஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?”

[25:8]

அல்லது இவருக்கு ஒரு புதையல்அளிக்கப்பட்டிருக்க வேண்டாமாஅல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம்உண்டாகியிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்) அன்றியும்இந்த அநியாயக்காரர்கள்; (முஃமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றிவேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்.

[25:9]

(நபியே!) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் – ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.

[25:10]

(நபியே!) இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் – இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.

[25:11]

எனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர் ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.

[25:12]

(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும்பேரிரைச்சலையும் அவர்கள்கேட்பார்கள்.

[25:13]

மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையைதாங்கமாட்டாமல்அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.

[25:14]

இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவைஅழைக்காதீர்கள்இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள் (என்று அவர்களிடம்கூறப்படும்).

[25:15]

அ(த்தகைய நரகமான)து நல்லதாஅல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதாஅது அவர்களுக்கு நற்கூலியாகவும்அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்” என்று (அவர்களிம் நபியே!) நீர் கூறும்.

[25:16]

அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் – இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.

[25:17]

அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி)என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழிகெடுத்தீர்களாஅல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?” என்று (இறைவன்) கேட்பான்.

[25:18]

(அதற்கு) அவர்கள் “இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத்தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம்அனுபவிக்கச் செய்தாய்அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்மேலும் அழிந்து போகும்கூட்டத்தாரானார்கள்” என்று கூறுவர்.

[25:19]

நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர் ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோஉதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்மேலும் உங்களில் எவன்அநியாயம் செய்து கொண்டிருந்தானோஅவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்” (என்று இறைவன் கூறுவான்).

[25:20]

(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும்கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும்தாம் இருந்தார்கள்மேலும்நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் – ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களாஉம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

[25:21]

மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்; “எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லைஅல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?” என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்மேலும்மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.

[25:22]

அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில்அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்தமலக்குகள் கூறுவார்கள்.

[25:23]

இன்னும்நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.

[25:24]

அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாககவும்சகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.

[25:25]

இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.

[25:26]

அந்நாளில் உண்மையான ஆட்சிஅர்ரஹ்மானுக்குத்தான்மேலும் காஃபிர்களுகு;கு கடுமையான நாளாகவும் இருக்கும்.

[25:27]

அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; “அத்தூதருடன் நானும் – (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் கூறுவான்.

[25:28]

எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?

[25:29]

நிச்சயமாகஎன்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்! (என்று புலம்புவான்.)

[25:30]

என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள் என்று (நம்) தூதர் கூறுவார்.

[25:31]

மேலும்இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்இன்னும்உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.

[25:32]

இன்னும்; “இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?” என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.

[25:33]

அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும், (அதை விடவும்) உண்மையானதும்அழகானதுமான ஒருவிளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.

[25:34]

எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோஅவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்பாதையால் பெரிதும் வழி கெட்டவர்கள்.

[25:35]

மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் – இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.

[25:36]

ஆகவே நாம், “நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்” என்று கூறினோம். பின்னர்அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.

[25:37]

இன்னும்நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போதுநாம் அவர்களை மூழ்கடித்தோம்அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.

[25:38]

இன்னும் ஆது‘ ‘ஸமூது‘ (கூட்டத்தாரையும்)ரஸ் (கிணறு) வாசிகளையும்இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்).

[25:39]

அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தெளிவான சான்றுகளை தெளிவுபடுத்தினோம். மேலும் (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்.

[25:40]

இன்னும்நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச்சென்றிருக்கிறார்கள் – அதனையும் இவர்கள் பார்க்கவில்லையாஎனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.

[25:41]

இவரைத்தானா அல்லாஹ் தூதராகஅனுப்பியிருக்கிறான் (என்று கூறி) உம்மை அவர்கள் காணும் பொழுது உம்மைக்கேலிக்குரியவராக அவர்கள் கருதுகின்றனர்.

[25:42]

நாம் (நம் தெய்வங்களின் மீது) உறுதியாக இல்லாதிருந்தால்நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார் (என்றும் அவர்கள் கூறுகின்றனர் (மறுமையின்) வேதனையைஅவர்கள் காணும்பொழுதுபாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.

[25:43]

தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீராஅ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?

[25:44]

அல்லதுநிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீராஅவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை (அவற்றை விடவும்) அவர்கள்மிகவும் வழி கெட்டவர்கள்.

[25:45]

(நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையாமேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை – நாம்தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.

[25:46]

பிறகுநாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.

[25:47]

அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும்நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்இன்னும்அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.

[25:48]

இன்னும்அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.

[25:49]

இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும்ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்.

[25:50]

அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.

[25:51]

மேலும்நாம் நாடியிருந்தால்ஒவ்வொரு ஊரிலும்அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.

[25:52]

ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக.

[25:53]

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.ஒன்றுமிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும்மீற முடியாத ஒரு தடையையும்ஏற்படுத்தியிருக்கிறான்.

[25:54]

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்துபின்னர் அவனுக்கு வம்சத்தையும்சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.

[25:55]

இவ்வாறிருந்தும்அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோதீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர் நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.

[25:56]

இன்னும் (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும்அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.

[25:57]

அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை – விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியைஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர என்று (நபியே!) நீர் கூறும்.

[25:58]

எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக இன்னும் அவன் தன்அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.

[25:59]

அவனே வானங்களையும்பூமியையும்அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்;. பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்ஆகவேஅறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.

[25:60]

இன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்‘ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால்அர்ரஹ்மான் என்பவன் யார்நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?” என்று கேட்கிறார்கள்இன்னும்இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது.

[25:61]

வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கிஅவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.

[25:62]

இன்னும் சிந்திக்க விரும்புபவருக்குஅல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும்பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.

[25:63]

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.

[25:64]

இன்னும்அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும்நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

[25:65]

எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும் என்று கூறுவார்கள்.

[25:66]

நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

[25:67]

இன்னும்அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும்இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

[25:68]

அன்றியும்அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்இன்னும்அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள்விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவேஎவர் இவற்றைச் செய்கிறாரோஅவர் தண்டனை அடைய நேரிடும்.

[25:69]

கியாம நாளில் அவருடைய வேதனைஇரட்டிப்பாக்கப்படும்இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

[25:70]

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டுஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடையபாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும்அல்லாஹ் மிக்கமன்னிப்போனாகவும்மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

[25:71]

இன்னும்எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோஅவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார்.

[25:72]

அன்றியும்அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்மேலும்அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

[25:73]

இன்னும் அவர்கள்தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால்செவிடர்களையும்குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)

[25:74]

மேலும் அவர்கள்; “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும்எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.

[25:75]

பொறுமையுடனிருந்த காரணத்தால்இவர்களுக்கு(ச் சுவனபதியிலி) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்வாழ்த்தும்ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.

[25:76]

அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.

[25:77]

(நபியே!) சொல்வீராக “உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால்என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான் ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவேஅதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.