Quran translations in many languages

Quran in Tamil

Al-Ghâshiyah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[88:1]

சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?

[88:2]

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.

[88:3]

அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.

[88:4]

கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.

[88:5]

கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

[88:6]

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிரவேறு உணவில்லை.

[88:7]

அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காதுஅன்றியும் பசியையும் தணிக்காது.

[88:8]

அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.

[88:9]

தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.

[88:10]

உன்னதமான சுவர்க்கச் சோலையில்-

[88:11]

அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.

[88:12]

அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.

[88:13]

அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.

[88:14]

(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.

[88:15]

மேலும்அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-

[88:16]

விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.

[88:17]

(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமாஅது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-

[88:18]

மேலும் வானத்தை அது எவ்வாறுஉயர்த்தப்பட்டிருக்கிறதுஎன்றும்,

[88:19]

இன்னும் மலைகளையும் அவை எப்படிநாட்டப்பட்டிருக்கின்றனஎன்றும்,

[88:20]

இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

[88:21]

ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராகநிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.

[88:22]

அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.

[88:23]

ஆயினும்எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்துமேலும் நிராகரிக்கின்றானோ-

[88:24]

அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.

[88:25]

நிச்சயமாகநம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.

[88:26]

பின்னர்நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.