Quran in Tamil
Al-Ghâshiyah
அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[88:1]
சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
[88:2]
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
[88:3]
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
[88:4]
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
[88:5]
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
[88:6]
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
[88:7]
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
[88:8]
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
[88:9]
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
[88:10]
உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
[88:11]
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
[88:12]
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
[88:13]
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
[88:14]
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
[88:15]
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
[88:16]
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
[88:17]
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
[88:18]
மேலும் வானத்தை அது எவ்வாறுஉயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
[88:19]
இன்னும் மலைகளையும் அவை எப்படிநாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
[88:20]
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
[88:21]
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
[88:22]
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
[88:23]
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
[88:24]
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
[88:25]
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
[88:26]
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.