Quran translations in many languages

Quran in Tamil

Al-Hâqqah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[69:1]

நிச்சயமானது.

[69:2]

நிச்சயமானது எது?

[69:3]

அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

[69:4]

ஸமூது (கூட்டத்தாரு)ம்ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.

[69:5]

எனவேஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.

[69:6]

இன்னும்ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.

[69:7]

அவர்கள் மீதுஅதை ஏழு இரவுகளும்எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்எனவே அந்த சமூகத்தினரைஅடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.

[69:8]

ஆகவேஅவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?

[69:9]

அன்றியும் ஃபிர்அவ்னும்அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.

[69:10]

அதனால்அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.

[69:11]

தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.

[69:12]

அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும்பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).

[69:13]

எனவேஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:

[69:14]

இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் –

[69:15]

அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.

[69:16]

வானமும் பிளந்துஅன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.

[69:17]

இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்அன்றியும்அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.

[69:18]

(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள்மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.

[69:19]

ஆகவேஎவருடைய பட்டோலை அவருடையவலக்கையில் கொடுக்கப்படுமோஅவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப்படியுங்கள்” எனக் கூறுவார்.

[69:20]

நிச்சயமாகநாம் உன்னுடைய கேள்வி கணக்கைதிட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.

[69:21]

ஆகவேஅவர் திருப்தியான சுக வாழ்க்கையில் –

[69:22]

உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.

[69:23]

அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.

[69:24]

சென்று போன நாட்களில் நீங்கள்முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால்நீங்கள் இப்போது மகிழ்வோடுபுசியுங்கள்இன்னும் பருகுங்கள் (என அவர்களுக்குக் கூறப்படும்).

[69:25]

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடையஇடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; “என்னுடைய பட்டோலை எனக்குக்கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!

[69:26]

அன்றியும்என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-

[69:27]

(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?

[69:28]

என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!

[69:29]

என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).

[69:30]

(அப்போது) அவனைப் பிடித்துபிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.

[69:31]

பின்அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

[69:32]

பின்னர்எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்).

[69:33]

நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.

[69:34]

அன்றியும்அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லைபிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.

[69:35]

எனவேஅவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.

[69:36]

சீழ் நீரைத் தவிரஅவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.

[69:37]

குற்றவாளிகளைத் தவிரவேறு எவரும் அதைப் புசியார்.

[69:38]

ஆகவேநீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.

[69:39]

நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)

[69:40]

நிச்சயமாகஇது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.

[69:41]

இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.

[69:42]

(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.

[69:43]

அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.

[69:44]

அன்றியும்நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் –

[69:45]

அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-

[69:46]

பின்னர்அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

[69:47]

அன்றியும்உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.

[69:48]

ஆகவேநிச்சயமாக அது (குர்ஆன்)பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.

[69:49]

ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

[69:50]

அன்றியும்நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.

[69:51]

மேலும்அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.

[69:52]

ஆகவேமகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.