Quran translations in many languages

Quran in Tamil

Al-Hashr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[59:1]

வானங்களிலுள்ளவையும்பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன)அவன் (யாவரையும்) மிகைத்தவன்ஞானம் மிக்கவன்.

[59:2]

வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோஅவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனேஎனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லைஅவர்களும்தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்ஆனால்அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான்அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர் எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.

[59:3]

தவிரவும்அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால்இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான்இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.

[59:4]

அதற்கு(க் காரணம்)நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும்அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள்அன்றியும்எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில்கடினமானவன்.

[59:5]

நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோஅல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும்அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவுபடுத்துவதற்காவுமே தான்.

[59:6]

மேலும்அல்லாஹ் தன் தூதருக்குஅவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லைஎனினும்நிச்சியமாக அல்லாஹ்தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

[59:7]

அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவைஅல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும்உறவினர்களுக்கும்அநாதைகளுக்கும்ஏழைகளுக்கும்வழிப்போக்கருக்குமாகும்மேலும்உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக்கட்டளையிடப் பட்டுள்ளது) மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்இன்னும்எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்மேலும்அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.

[59:8]

எவர்கள் தம் வீடுகளையும்தம் சொத்துகளையும் விட்டுஅல்லாஹ்வின் அருளையும்அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு)அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.

[59:9]

இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டுஅவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்அன்றியும் அ(வ்வாறு குடியேறிய)வர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்மேலும்தங்களுக்குத் தேவையிருந்த போதிலும்தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் – இவ்வாறு எவர்கள் உள்ளத்தின்உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோஅத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.

[59:10]

அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே!எங்களுக்கும்ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாகஅன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.

[59:11]

(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையாஅவர்கள்வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக்கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம்நீங்கள் வெளியேற்றப்பட்டால்உங்களுடன்நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள்எவருக்கும்எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்மேலும்உங்களுக்கெதிராக போர்செய்யப்பெற்றால்நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்றுகூறுகின்றனர்ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங்கூறுகிறான்.

[59:12]

அவர்கள் வெளியேற்றப்பட்டால்இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள்மேலும்அவர்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால்இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள்அன்றியும் இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும்நிச்சயமாக புறுமுதுகு காட்டிப் பின் வாங்கி விடுவார்கள் – பின்னர் அவர்கள் (எத்தகைய) உதவியும் அளிக்கப்பட மாட்டார்கள்.

[59:13]

நிச்சயமாகஅவர்களுடைய இதயங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய பயமே பலமாக இருக்கிறது, (அல்லாஹ்வை விட்டும் அவர்கள் உங்களை அதிகம் அஞ்சுவதற்கு காரணம்) அவர்கள் (உண்மையை) உணர்ந்துகொள்ளாத சமூகத்தினராக இருப்பதனால்தான் இந்த நிலை!

[59:14]

கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள்அவர்களுக்குள்ளேயே போரும்பகையும் மிகக் கடுமையானவை, (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள்சிதறிக்கிடக்கின்றன – இதற்குக் காரணம்மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.

[59:15]

இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்குரிய பலனை அனுபவித்தனர்அன்றியும்அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.

[59:16]

(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது, (அவன்) மனிதனை நோக்கி, “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன்நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன், (ஏனெனில்) நான்அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான்.

[59:17]

அவ்விருவரின் முடிவுநிச்சயமாக அவர்கள் என்றென்றும் தங்கும் நரக நெருப்புத்தான்அநியாயக் காரர்களின் கூலி இதுவேயாகும்.

[59:18]

ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்மேலும்ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்இன்னும்நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்நீங்கள் செய்பவற்றைநிச்சயமாகஅல்லாஹ் நன்கறிந்தவன்.

[59:19]

அன்றியும்அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் – பெரும் பாவிகள் ஆவார்கள்.

[59:20]

நரக வாசிகளும்சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம்உடையோர்.

[59:21]

(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால்அல்லாஹ்வின் பயத்தால்அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்மேலும்மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.

[59:22]

அவனே அல்லாஹ்வணக்கத்திற்குரியவன்அவனைத் தவிர வேறு நாயன் இல்லைமறைவானதையும்பகிரங்கமானதையும் அறிபவன்அவனே அளவற்ற அருளாளன்நிகரற்ற அன்புடையோன்.

[59:23]

அவனே அல்லாஹ்வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவரவேறு யாரும் இல்லைஅவனே பேரரசன்மிகப்பரிசுத்தமானவன்சாந்தியளிப்பவன்தஞ்சமளிப்பவன்பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன்அடக்கியாள்பவன்பெருமைக்குரித்தானவன் – அவர்கள்இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

[59:24]

அவன்தான் அல்லாஹ்படைப்பவன்ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றனவானங்களிலும்பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன – அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.