Quran translations in many languages

Quran in Tamil

Al-Infitâr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[82:1]

வானம் பிளந்து விடும்போது

[82:2]

நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-

[82:3]

கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,

[82:4]

கப்றுகள் திறக்கப்படும் போது,

[82:5]

ஒவ்வோர் ஆத்மாவும்அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்ததுஎதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

[82:6]

மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

[82:7]

அவன்தான் உன்னைப்படைத்துஉன்னை ஒழுங்குபடுத்திஉன்னைச் செவ்வையாக்கினான்.

[82:8]

எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.

[82:9]

இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.

[82:10]

நிச்சயமாகஉங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.

[82:11]

(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.

[82:12]

நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.

[82:13]

நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

[82:14]

இன்னும்நிச்சயமாகதீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.

[82:15]

நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.

[82:16]

மேலும்அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.

[82:17]

நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?

[82:18]

பின்னும் – நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?

[82:19]

அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாதுஅதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.