Quran translations in many languages

Quran in Tamil

Al-Insân

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[76:1]

திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்துஅதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?

[76:2]

(பின்னர் ஆண்பெண்) கலப்பானஇந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனை நாம்சோதிப்பதற்காகஅவனைக் கேட்பவனாகவும்பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

[76:3]

நிச்சயமாகநாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்அல்லது(அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.

[76:4]

காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும்அரிகண்டங்களையும்கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.

[76:5]

நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்அதன் கலப்பு காஃபூராக (கற்பூரமாக) இருக்கும்,

[76:6]

(காஃபூர்) ஒரு சுனையாகும்அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள்.அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.

[76:7]

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.

[76:8]

மேலும்அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும்அநாதைகளுக்கும்சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.

[76:9]

உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம்அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக)உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை (என்று அவர்கள் கூறுவர்).

[76:10]

எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம் (என்றும் கூறுவர்).

[76:11]

எனவேஅல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும்மனமகிழ்வையும் அளிப்பான்.

[76:12]

மேலும்அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும்பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.

[76:13]

அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்சூரியனையோகடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.

[76:14]

மேலும்அதன் (மர) நிழல்கள்அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்அன்றியும்அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.

[76:15]

(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும்பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.

[76:16]

(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலானபளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள்.அவற்றைத் தக்க அளவாக அமைந்திருப்பார்கள்.

[76:17]

மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.

[76:18]

ஸல்ஸபீல்‘ என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.

[76:19]

இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.

[76:20]

அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின்இன்ப பாக்கியங்களையும்மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.

[76:21]

அவர்களின் மீது ஸுன்துஸுஇஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்அன்றியும்அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.

[76:22]

நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று (என்று அவர்களிடம் கூறப்படும்).

[76:23]

நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.

[76:24]

ஆகவேஉம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராகஅன்றியும்அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.

[76:25]

காலையிலும்மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக.

[76:26]

இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராகஅன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு(துதி) செய்வீராக.

[76:27]

நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர்அப்பால் பளுவான (மறுமை) நாளைத்தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.

[76:28]

நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.

[76:29]

நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.

[76:30]

எனினும்அல்லாஹ் நாடினாலன்றிநீங்கள் நாட மாட்டீர்கள்நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்ஞானம் மிக்கவன்.

[76:31]

அவன்தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.