Quran translations in many languages

Quran in Tamil

Al-Inshiqâq

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[84:1]

வானம் பிளந்துவிடும் போது

[84:2]

தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-

[84:3]

இன்னும்பூமி விரிக்கப்பட்டு,

[84:4]

அதுதன்னிலுள்ளவற்றை வெளியாக்கிஅது காலியாகி விடும் போது-

[84:5]

தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.

[84:6]

மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் – பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.

[84:7]

ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடையவலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,

[84:8]

அவன் சுலபமான விசாரணையாகவிசாரிக்கப்படுவான்.

[84:9]

இன்னும்தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.

[84:10]

ஆனால்எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-

[84:11]

அவன் (தன்குக்) கேடு‘ தான் எனக் கூவியவனாக-

[84:12]

அவன் நரகத்தில் புகுவான்.

[84:13]

நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.

[84:14]

நிச்சயமாகதான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான்.

[84:15]

அப்படியல்லநிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.

[84:16]

இன்னும்அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

[84:17]

மேலும்இரவின் மீதும்அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,

[84:18]

பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).

[84:19]

நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.

[84:20]

எனவேஅவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.

[84:21]

மேலும்அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால்அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.

[84:22]

அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.

[84:23]

ஆனால் அல்லாஹ்அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்குஅறிந்திருக்கின்றான்.

[84:24]

(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.

[84:25]

எவர்கள் ஈமான்கொண்டுஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர – அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.