Quran translations in many languages

Quran in Tamil

Al-Jinn

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[72:1]

நிச்சயமாகஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்)நிச்சயமாக நாங்கள்மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்” என்று கூறினர்என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.

[72:2]

அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறதுஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம் (என்று அந்த ஜின் கூறலாயிற்று).

[72:3]

மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானதுஅவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.

[72:4]

ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளைசொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

[72:5]

மேலும் “மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்” என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

[72:6]

ஆனால்நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர்இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ளஅவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.

[72:7]

இன்னும்நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவேஅல்லாஹ் ஒருவரையும்(மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.

[72:8]

நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும்தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதைநாங்கள்கண்டோம்.

[72:9]

(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில்நாங்கள் அமர்ந்திருப்போம்ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோஅவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்.

[72:10]

அன்றியும்பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதாஅல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.

[72:11]

மேலும்நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர்அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர்நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.

[72:12]

அன்றியும்நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாதுஎன்பதையும்அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்)இயலாமலாக்க முடியாதென்பதையும்நாம் அறிந்து கொண்டோம்.

[72:13]

இன்னும்நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போதுநாம் அதன் மீது ஈமான் கொண்டோம்.” எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோஅவன் இழப்பைப் பற்றியும்அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.

[72:14]

இன்னும்நிச்சயமாகநம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் – எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.

[72:15]

அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்” (என்று அந்த ஜின் கூறிற்று).

[72:16]

(மானிடர்களோஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீதுஉறுதியுடன் நிலைத்து நின்றால்நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.

[72:17]

அதைக் கொண்டு நாம் அவர்களைச் சோதிப்பதற்காகஆகவேஎவன் தன் இறைவனைநினைப்பதைப் புறக்கணிக்கிறானோஅவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.

[72:18]

அன்றியும்நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றனஎனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.

[72:19]

மேலும்நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோதுஅவர்பால் அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து) நெருங்கிவிடுகின்றனர்.

[72:20]

(நபியே!) நீர் கூறும்; “நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்அன்றியும்நான்அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்.

[72:21]

கூறுவீராக, “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோதீமையோசெய்ய சக்தி பெற மாட்டேன்.

[72:22]

கூறுவீராக, “நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்இன்னும்அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.

[72:23]

அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும்அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவேஎவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பர் என (நபியே!) நீர் கூறும்.

[72:24]

அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போதுஎவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.

[72:25]

(நபியே!) நீர் கூறும், “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமாஅல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.

[72:26]

(அவன்தான்) மறைவனாவற்றை அறிந்தவன்எனவேதான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.

[72:27]

தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர – எனவே அவருக்கு முன்னும்அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்.

[72:28]

தங்களுடைய இறைவனின் தூதுத்துவச் செய்திகளைதிட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களாஎன்று அறிவதற்காக – இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன்அவன் சகலபொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.