Quran translations in many languages

Quran in Tamil

Al-Jumuʽah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[62:1]

வானங்களிலுள்ளவையும்பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன, (அவன்தான்) மெய்யான பேரரசன்பரிசுத்தமானவன்யாவரையும் மிகைத்தவன்ஞானம் மிக்கவன்.

[62:2]

அவன்தான்எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டிஅவர்களைப் பரிசுத்தமாக்கிஅவர்களுக்குவேதத்தையும்ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்அவர்களோஅதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.

[62:3]

(இவர்களுக்காகவும்)இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்ஞானம் மிக்கவன்.

[62:4]

அதுவே அல்லாஹ்வின் அருளாகும்தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

[62:5]

எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோஅவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் – அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

[62:6]

(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால்மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின்நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.

[62:7]

ஆனால்அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால்அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும்அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.

[62:8]

நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோஅந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்பிறகுமறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் – அப்பால்அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான் (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.

[62:9]

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்வியாபாரத்தை விட்டுவிட்டுஅல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

[62:10]

பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்அன்றியும்நீங்கள்வெற்றியடையும் பொருட்டுஅல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.

[62:11]

இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோஅல்லது ஒரு வேடிக்கையையோகண்டால்அதன்பால் அவர்கள்சென்று விடுகின்றனர். மேலும்நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், “அல்லாஹ்விடத்தில் இருப்பதுவேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.