Quran in Tamil Al-Masad அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.[111:1]அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.[111:2]அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.[111:3]விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.[111:4]விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,[111:5]அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).