Quran translations in many languages

Quran in Tamil

Al-Mulk

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[67:1]

எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்மேலும்அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

[67:2]

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன்மிக மன்னிப்பவன்.

[67:3]

அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்)ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?

[67:4]

பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்உன் பார்வை களைத்துமழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.

[67:5]

அன்றியும்திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்இன்னும்அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறிகற்களாகவும் நாம் ஆக்கினோம்அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.

[67:6]

இன்னும்எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோஅவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்டமீளுமிடமாகும்.

[67:7]

அதில் அவர்கள் போடப்படுவார்களாயின்அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.

[67:8]

அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறதுஅதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன்காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.

[67:9]

அதற்கவர்கள் கூறுவார்கள்; “ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, ‘அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லைநீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.

[67:10]

இன்னும் அவர்கள் கூறுவார்கள்; “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோஇருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.

[67:11]

(இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் – எனவேஇந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.

[67:12]

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோஅவர்களுக்கு மன்னிப்புமுண்டுபெரிய நற்கூலியும் உண்டு.

[67:13]

மேலும்உங்கள் சொல்லை நீங்கள்இரகசியமாக்குங்கள்அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன்இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்.

[67:14]

(அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா?அவன் நுணுக்கமாக கவனிப்பவன்யாவற்;றையும் நன்கு தெறிந்தவன்.

[67:15]

அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்ஆகவேஅதன் பல மருங்குகளிலும்நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.

[67:16]

வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களாஅப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.

[67:17]

அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களாஆகவேஎனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

[67:18]

அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர்என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?

[67:19]

இறக்கைகளை விரித்துக் கொண்டும்சேர்த்துக் கொண்டும்இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையாஅர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை – நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுகிபவன்.

[67:20]

அன்றியும்அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப் பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை.

[67:21]

அல்லதுதான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால்உங்களுக்கு உணவளிப்பவர் யார்அப்படியல்லஆனால்இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.

[67:22]

முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனாஅல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.

[67:23]

(நபியே!) நீர் கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும்பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றிசெலுத்துகிறீர்கள்.

[67:24]

அவனே உங்களைப் பூமியின் (பல பாகங்களிலும்) பரவச் செய்தான்அன்றியும்அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்று கூறுவீராக.

[67:25]

ஆயினும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)?” என்று (காஃபிர்கள்) கேட்கிறார்கள்.

[67:26]

இதைப் பற்றி ஞானம் நிச்சயமாகஅல்லாஹ்விடமே தான் இருக்கிறதுதவிரநிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டிஎச்சரிக்கை செய்பவன் தான் என்று (நபியே!) நீர் கூறும்.

[67:27]

எனவேஅது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும்இன்னும், “நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோஅது இது தான்” என்று அவர்களுக்குக் கூறப்படும்.

[67:28]

கூறுவீராக: அல்லாஹ்என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும்அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும்நோவினை செய்யும் வேதனையை விட்டுகாஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?

[67:29]

(நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே – அர்ரஹ்மான்அவன் மீதே நாங்கள் ஈமாக் கொண்டோம்மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் – எனவேவெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!

[67:30]

(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால்அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்என்பதை கவனித்தீர்களாஎன்று (எனக்கு அறிவியுங்கள்).