Quran translations in many languages

Quran in Tamil

Al-Mutaffifin

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[83:1]

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.

[83:2]

அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.

[83:3]

ஆனால்அவர்கள் அளந்தோநிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.

[83:4]

நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?

[83:5]

மகத்தான ஒரு நாளுக்காக,

[83:6]

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-

[83:7]

ஆகவேநிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது

[83:8]

ஸிஜ்ஜீன்‘ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

[83:9]

அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.

[83:10]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[83:11]

அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.

[83:12]

வரம்பு மீறியபெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.

[83:13]

நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே” என்று கூறுகின்றான்.

[83:14]

அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.

[83:15]

(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.

[83:16]

பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.

[83:17]

எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோஅதுதான் இது என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.

[83:18]

நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும்இல்லிய்யீனில் இருக்கிறது.

[83:19]

இல்லிய்யுன்‘ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

[83:20]

(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.

[83:21]

(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.

[83:22]

நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) நயீம்‘ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

[83:23]

ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.

[83:24]

அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.

[83:25]

(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோகளங்கமோ அற்ற) மதுவிலிருந்துஅவர்கள் புகட்டப்படுவார்கள்.

[83:26]

அதன் முத்திரை கஸ்தூரியாகும்எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப்பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.

[83:27]

இன்னும்அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.

[83:28]

அது (தஸ்னீம்ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.

[83:29]

நிச்சயமாககுற்றமிழைத்தார்களே அவர்கள்ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

[83:30]

அன்றியும்அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடைசெய்துகொள்வார்கள்.

[83:31]

இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.

[83:32]

மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால்நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்” என்றும் கூறுவார்கள்.

[83:33]

(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!

[83:34]

ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.

[83:35]

ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.

[83:36]

காஃபிர்களுக்குஅவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)