Quran translations in many languages

Quran in Tamil

Al-Qamar

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[54:1]

(இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது.

[54:2]

எனினும்அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், “இதுவழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.

[54:3]

அன்றியும்அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர்ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.

[54:4]

அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.

[54:5]

நிறைவான ஞானம் உடையவை – ஆனால்(அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.

[54:6]

ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும், (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்;

[54:7]

(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன்அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும்வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.

[54:8]

அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள், “இது மிகவும் கஷ்டமான நாள்” என்றும் அக்காஃபிர்கள்கூறுவார்கள்.

[54:9]

இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) பைத்தியக்காரர்‘ என்று கூறினர்அவர் விரட்டவும்பட்டார்.

[54:10]

அப்போது அவர், “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்ஆகவேநீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.

[54:11]

ஆகவேநாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.

[54:12]

மேலும்பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்இவ்வாறாககுறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.

[54:13]

அப்போதுபலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.

[54:14]

எனவேஎவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோஅவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.

[54:15]

நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

[54:16]

ஆகவேஎன் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும்எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)

[54:17]

நிச்சயமாகஇக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

[54:18]

ஆது‘ (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்அதனால்என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)

[54:19]

நிச்சயமாக நாம் அவர்கள் மீதுநிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில்பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.

[54:20]

நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.

[54:21]

ஆகவேஎன் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)

[54:22]

நிச்சமயாகஇக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

[54:23]

ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.

[54:24]

நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம் என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.

[54:25]

நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும்அல்ல! அவர் ஆணவம்பிடித்த பெரும் பொய்யர் (என்றும் அவர்கள் கூறினர்).

[54:26]

ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.

[54:27]

அவர்களைச் சோதிக்கும் பொருட்டுநிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம்ஆகவேநீர் அவர்களை கவனித்துக் கொண்டும்பொறுமையுடனும் இருப்பீராக!

[54:28]

(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்றுஅவர்களுக்கு அறிவித்து விடும்.

[54:29]

ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர்அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.

[54:30]

என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும்எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)

[54:31]

நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் – அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.

[54:32]

நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

[54:33]

லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.

[54:34]

லூத்துடைய குடும்பத்தாரைத் தவிரமற்றவர்கள் மீதுநாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம்விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.

[54:35]

நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.

[54:36]

திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர்.

[54:37]

அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள்ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். “என்(னால் உண்டாகும்) வேதனையையும்எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்” (என்றும் கூறினோம்).

[54:38]

எனவேஅதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.

[54:39]

ஆகவேஎன்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்).

[54:40]

நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

[54:41]

ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.

[54:42]

ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர்அப்போதுசக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.

[54:43]

(சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களாஅல்லதுஉங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா?

[54:44]

அல்லது (நபியே!) “நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்” என்று அவர்கள் கூறுகின்றார்களா?

[54:45]

அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.

[54:46]

அதுவுமின்றிமறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க கசப்பானதுமாகும்.

[54:47]

நிச்சயமாகஅக்குற்றவாளிகள் வழி கேட்டிலும்மதியிழந்தும் இருக்கின்றனர்.

[54:48]

அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், “நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்).

[54:49]

நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.

[54:50]

நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.

[54:51]

(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம்நிச்சயமாக அழித்திருக்கின்றோம்எனவே (இதிலிருந்து)நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

[54:52]

அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.

[54:53]

சிறிதோபெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.

[54:54]

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்

[54:55]

உண்மையான இருக்கையில் சர்வவல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.