Quran in Tamil Al-Sharh அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.[94:1]நாம், உம் இதயத்தை உமக்காகவிரிவாக்கவில்லையா?[94:2]மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.[94:3]அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.[94:4]மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.[94:5]ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.[94:6]நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.[94:7]எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.[94:8]மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.