Quran translations in many languages

Quran in Tamil

Ar-Rahmân

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[55:1]

அளவற்ற அருளாளன்,

[55:2]

இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.

[55:3]

அவனே மனிதனைப் படைத்தான்.

[55:4]

அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.

[55:5]

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.

[55:6]

(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் – (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.

[55:7]

மேலும்வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.

[55:8]

நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.

[55:9]

ஆகவேநீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்எடையைக் குறைக்காதீர்கள்.

[55:10]

இன்னும்பூமியை – படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.

[55:11]

அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-

[55:12]

தொலிகள் பொதிந்த தானிய வகைகளும்வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.

[55:13]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:14]

சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்துஅவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.

[55:15]

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.

[55:16]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:17]

இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனேஇரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.

[55:18]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:19]

அவனேஇரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.

[55:20]

(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறதுஅதை அவை மீறமாட்டா.

[55:21]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:22]

அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.

[55:23]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:24]

அன்றியும்மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.

[55:25]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:26]

(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே –

[55:27]

மிக்க வல்லமையும்கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.

[55:28]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:29]

வானங்களிலும்பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.

[55:30]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:31]

இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.

[55:32]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:33]

மனுஜின் கூட்டத்தார்களே! வானங்கள்பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.

[55:34]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில்எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:35]

 (மறுமையில்) உங்களிருசாரார் மீதும்நெருப்பின் ஜீவாலையும்புகையும் அனுப்பப்படும்அப்பொழுது நீங்கள் (இரு சாராரும்எவரிடமிருந்தும்) உதவிபெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

[55:36]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில்எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:37]

எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்துரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.

[55:38]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில்எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:39]

எனவேஅந்நாளில் மனிதர்களிடமோஜின்களிடமோஅவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.

[55:40]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில்எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:41]

குற்றவாளிகள்அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் –அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும்கால்களும் கொண்டுபிடிக்கப்படுவார்கள்

[55:42]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில்எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:43]

அன்று அவர்களிடம்இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்).

[55:44]

அவர்கள் அதற்கு இடையிலும்கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

[55:45]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:46]

தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.

[55:47]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:48]

அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.

[55:49]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:50]

அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.

[55:51]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:52]

அவ்விரண்டிலும்ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.

[55:53]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:54]

அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்அவற்றின் உள் பாகங்கள்இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவைமேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.

[55:55]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:56]

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும்எந்தஜின்னும் தீண்டியதில்லை.

[55:57]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:58]

அவர்கள் வெண் முத்தைப் போன்றும்பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.

[55:59]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:60]

நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?

[55:61]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:62]

மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல்வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.

[55:63]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:64]

அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.

[55:65]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:66]

அவ்விரண்டிலும்இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.

[55:67]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:68]

அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும்பேரீச்சையும்மாதுளையும் உண்டு.

[55:69]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:70]

அவற்றில்அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

[55:71]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:72]

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

[55:73]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:74]

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும்எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

[55:75]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:76]

(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும்அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

[55:77]

ஆகவேநீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:78]

மிக்க சிறப்பும்கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.