Quran translations in many languages

Quran in Tamil

As-Sâffât

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[37:1]

அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,

[37:2]

பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,

[37:3]

(நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,

[37:4]

நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.

[37:5]

வானங்களுக்கும்பூமிக்கும்இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்கீழ்திசைகளின் இறைவன்.

[37:6]

நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டுஅழகுபடுத்தியிருக்கிறோம்.

[37:7]

(அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).

[37:8]

(அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும்அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.

[37:9]

(அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.

[37:10]

(ஏதேனும் செய்தியை) இறைஞ்சிச் செல்ல முற்பட்டால்அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.

[37:11]

ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம்பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப்பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.

[37:12]

(நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.

[37:13]

அன்றியும்அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.

[37:14]

அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.

[37:15]

இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

[37:16]

நாங்கள் இறந்துமண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும்மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)

[37:17]

அவ்வாறேமுந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்என்றும் கேட்கின்றனர்.)

[37:18]

ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள் என்று (நபியே!) நீர் கூறும்.

[37:19]

ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.

[37:20]

(அவ்வேளை) எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே” என்று அவர்கள் கூறுவர்.

[37:21]

நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்! (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)

[37:22]

அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும்அவர்கள்வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.

[37:23]

அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களைநரகத்தின் பாதைக்குகொண்டு செல்லுங்கள்.

[37:24]

இன்னும்அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள் (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)

[37:25]

உங்களுக்கு என்ன நேர்ந்ததுநீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை? (என்று கேட்கப்படும்).

[37:26]

ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.

[37:27]

அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கிஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும்இருப்பார்கள்.

[37:28]

(தம் தலைவர்களை நோக்கி) “நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம்வருகிறவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.

[37:29]

(“அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக – நம்பிக்கை கொண்டோராய் – இருக்கவில்லை!” என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.

[37:30]

அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்.

[37:31]

ஆகையால்எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!

[37:32]

(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான்இருந்தோம்.

[37:33]

ஆகவேஅந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.

[37:34]

குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.

[37:35]

அல்லாஹ்வைத்தவிர நாயன் இல்லை என்று அவர்களுக்குக் கூறப்பட்டால்மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.

[37:36]

ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களாஎன்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

[37:37]

அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.

[37:38]

(இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.

[37:39]

ஆனால்நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.

[37:40]

அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-

[37:41]

அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.

[37:42]

கனி வகைகள் (அளிக்கப்படும்)இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;

[37:43]

இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் –

[37:44]

ஒருவரையொருவர் முன்னோக்கியவாறுகட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).

[37:45]

தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசைசுற்றி கொண்டுவரும்.

[37:46]

(அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது.

[37:47]

அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.

[37:48]

இன்னும்அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும்நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.

[37:49]

(தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.

[37:50]

(அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.

[37:51]

அவர்களில் ஒருவர்எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.

[37:52]

(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.

[37:53]

நாம் இறந்து மண்ணாகவும்எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலிவழங்கப்பெறுவோமாஎன்றும் கேட்டான்.

[37:54]

(அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கூறுவார்.

[37:55]

அவர் (கீழே) நோக்கினார்அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.

[37:56]

(அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!

[37:57]

என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால்நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.

[37:58]

(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா?

[37:59]

(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை அன்றியும்நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர் என்று கூறுவார்.

[37:60]

நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.

[37:61]

எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.

[37:62]

அது சிறப்பான விருந்தாஅல்லது(நரகத்திலிருக்கும் கள்ளி) ஜக்கூம்‘ என்ற மரமா?

[37:63]

நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.

[37:64]

மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.

[37:65]

அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.

[37:66]

நிச்சயமாகஅவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.

[37:67]

பின்னர்நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்ககொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.

[37:68]

அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.

[37:69]

நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.

[37:70]

ஆகையால்அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே இவர்களும் விரைந்தார்கள்.

[37:71]

இன்னும்இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.

[37:72]

மேலும்நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.

[37:73]

பிறகுஅவ்வாறு அச்சமூட்டிஎச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.

[37:74]

அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர.

[37:75]

அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.

[37:76]

ஆகவேநாம் அவரையும் அவருடையகுடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.

[37:77]

மேலும்அவர்களுடைய சந்ததியரை(பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.

[37:78]

மேலும்அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.

[37:79]

ஸலாமுன் அலாநூஹ் – அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.

[37:80]

இவ்வாறேநன்மை செய்வோருக்கு நிச்யமாக நாம் கூலி கொடுக்கிறோம்.

[37:81]

நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.

[37:82]

பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.

[37:83]

நிச்சயமாகஇப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர்தாம்.

[37:84]

அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).

[37:85]

அவர் தம் தந்தையையும்தம் சமூகத்தாரையும் நோக்கி “நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்எனக் கேட்ட போது,

[37:86]

அல்லாஹ்வையன்றி பொய்யானதெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?

[37:87]

அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன? (என்று கேட்டார்.)

[37:88]

பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.

[37:89]

நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன் என்றும் கூறினார்.

[37:90]

எனவே அவரை விட்டும் அ(வருடையசமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.

[37:91]

அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று “(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கூறினார்.

[37:92]

உங்களுக்கு என்ன (நேர்ந்தது)நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை? (என்றும் கேட்டார்.)

[37:93]

பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.

[37:94]

(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.

[37:95]

அவர் கூறினார்! “நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?”

[37:96]

உங்களையும்நீங்கள் செய்த(இ)வற்றையும்அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.

[37:97]

அவர்கள் கூறினார்கள்; “இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.

[37:98]

(இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்ஆனால்நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.

[37:99]

மேலும்அவர் கூறினார்; “நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.

[37:100]

என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக (என்று பிரார்த்தித்தார்).

[37:101]

எனவேநாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

[37:102]

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள்பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.

[37:103]

ஆகவேஅவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது

[37:104]

நாம் அவரை “யா இப்றாஹீம்!” என்றழைத்தோம்.

[37:105]

திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

[37:106]

நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.

[37:107]

ஆயினும்நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம்.

[37:108]

இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;

[37:109]

ஸலாமுன் அலா இப்ராஹீம் (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!

[37:110]

இவ்வாறேநன்மை செய்வோருக்குநாம் கூலி கொடுக்கிறோம்.

[37:111]

நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.

[37:112]

ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபிஇஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.

[37:113]

இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.

[37:114]

மேலும்மூஸாஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.

[37:115]

அவ்விருவரையும்அவ்விருவருடையசமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திருந்து இரட்சித்தோம்.

[37:116]

மேலும்நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.

[37:117]

அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.

[37:118]

இன்னும்நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.

[37:119]

இன்னும் அவ்விருவருக்குமாகப்பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;

[37:120]

ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன்மூஸாவுக்கும்ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.

[37:121]

இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறொம்.

[37:122]

நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.

[37:123]

மேலும்நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் – தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.

[37:124]

அவர் தம் சமூகத்தவரிடம்; “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).

[37:125]

நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு பஃலு‘ (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?

[37:126]

அல்லாஹ்தான் – உங்களுடைய இறைவனும்உங்களுடை முன் சென்ற மூதாதையர்களின்இறைவனும் ஆவான்.

[37:127]

ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்ஆகையால்அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.

[37:128]

அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)

[37:129]

மேலும்நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;

[37:130]

ஸலாமுன் அலா இல்யாஸீன் இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.

[37:131]

இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.

[37:132]

நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்) அடியார்களில் நின்றுமுள்ளவர்.

[37:133]

மேலும்லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் – அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.

[37:134]

அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் –

[37:135]

பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.

[37:136]

பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.

[37:137]

இன்னும்நீங்கள் காலை வேலைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.

[37:138]

இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?

[37:139]

மேலும்யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் – அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.

[37:140]

நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது –

[37:141]

அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் – இவர் தாம் குற்றமுள்ளவர் (என்றுதீர்மானித்தனர்).

[37:142]

ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று.

[37:143]

ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து – தஸ்பீஹு செய்து – கொண்டிராவிட்டால் –

[37:144]

(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரைஅதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.

[37:145]

ஆனால்அவர் நோயுற்றிருந்த நிலையில்நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.

[37:146]

அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.

[37:147]

மேலும்நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.

[37:148]

ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள். ஆகையால் அவர்களை ஒரு காலம்வரை சுகிக்;கச்செய்தோம்.

[37:149]

(நபியே!) அவர்களிடம் கேளும்உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.

[37:150]

அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?

[37:151]

அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.

[37:152]

அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான் (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!

[37:153]

(அன்றியும்அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?

[37:154]

உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?

[37:155]

நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?

[37:156]

அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?

[37:157]

நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின்உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.

[37:158]

அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர் ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.

[37:159]

எனவேஅவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.

[37:160]

அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.

[37:161]

ஆகையால்நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.

[37:162]

(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.

[37:163]

நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.

[37:164]

(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்😉 “குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை.

[37:165]

நிச்சயமாகநாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).

[37:166]

மேலும்நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.

[37:167]

(நபியே! மக்காவாசிகள் முன்னர்)கூறிக்கொண்டிருந்தார்கள்;

[37:168]

முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் –

[37:169]

அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்” என்று.

[37:170]

ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் – (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!

[37:171]

தூதர்களாகிய நம் அடியார்களிடம்முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.

[37:172]

(அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் –

[37:173]

மேலும்நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.

[37:174]

(ஆகவேநபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!

[37:175]

(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.

[37:176]

நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?

[37:177]

(அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.

[37:178]

ஆகவேசிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.

[37:179]

(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.

[37:180]

அவர்கள் வர்ணிப்பதை விட்டும்கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.

[37:181]

மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.

[37:182]

வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).