Quran translations in many languages

Quran in Tamil

As-Sajdah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[32:1]

அலிஃப்லாம்மீம்.

[32:2]

அகிலங்களின் இறைவனிடம் இருந்துஅருளப்பட்டுள்ளது – இவ்வேதம் என்பதில் சந்தேகமே இல்லை.

[32:3]

ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களாஅவ்வாறல்லஎவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர்வந்ததில்லையோஅந்த சமூகத்தாருக்குஅவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ளஉண்மை(வேதமாகும்).

[32:4]

அல்லாஹ் தான் வானங்களையும்பூமியையும்இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோபரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?

[32:5]

வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும்அந்த (நாளின்) அளவு நீங்கள்கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

[32:6]

அவனே மறைவானதையும்வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன்; (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன்அன்புடையோன்.

[32:7]

அவனே தான் படைத்துள்ள ஒவ்வொருபொருளையும் அழகாக்கினான்இன்னும்அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்துஆரம்பித்தான்.

[32:8]

பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்துஅவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.

[32:9]

பிறகு அவன் அதைச் சரி செய்துஅதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் – இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும்பார்வைப் புலன்களையும்இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.

[32:10]

நாம் பூமியில் அழிந்து போய் விடுவோமாயின் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாவோமாஎனவும் அவர்கள் கூறுகின்றனர்ஏனெனில் அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையே நிராகரிப்போராய் இருக்கிறார்கள்.

[32:11]

உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும்மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் – பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

[32:12]

மேலும்இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், “எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம்கேட்டும் கொண்டோம் – ஆகவேநீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்” என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).

[32:13]

மேலும் நாம் நாடியிருந்தால்ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை – ஜின்களையும், (தீய) மனிதர்களையும் – ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.

[32:14]

ஆகவேஉங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததின் (பலனை) அனுபவியுங்கள்நிச்சயமாக நாமும் உங்களை மறந்து விட்டோம்மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).

[32:15]

நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள்அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால்அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்துதுதிப்பார்கள்அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.

[32:16]

அவர்களுடைய விலாக்களைப்படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனைஅச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்மேலும் நாம்அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.

[32:17]

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.

[32:18]

எனவே, (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாக மாட்டார்கள்.

[32:19]

எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)கருமங்களின் காரணமாக சுவனபதிகள் தங்குமிடங்களாகி (அங்கு அவர்கள்) விருந்தினராய் (உப சரிக்கப்படுவார்கள்).

[32:20]

ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோஅவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் – அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம்அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

[32:21]

மேலும்அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.

[32:22]

எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோஅவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.

[32:23]

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம். எனவேஅவர் அதைப் பெற்றதைப்பற்றி சந்தேகப்படாதீர்நாம் இதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.

[32:24]

இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்துநம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போதுநம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை – இமாம்களை – அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.

[32:25]

அவர்கள் எ(வ்விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ, (அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான்.

[32:26]

இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும்அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும்இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையாநிச்சயமாக இதில் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கு) இவர்கள் செவிசாய்க மாட்டார்களா?

[32:27]

அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா – நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?

[32:28]

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வாக்களிக்கப்பட்ட) அந்த வெற்றித் (தீர்ப்பு நாள்) எப்பொழுது (வரும்)என்று அவர்கள் கூறுகிறார்கள்.

[32:29]

அந்த வெற்றி(த் தீர்ப்பு) நாளின் போது நிராகரிப்போர்நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு பயன் அளிக்காது – அவர்களுகு;குத்தவணையும் கொடுக்கப்பட மாட்டாது.

[32:30]

ஆகவேநீர் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்ப்பீராக! நிச்சயமாக அவர்களும் அதை எதிர்பார்ப்பவர்கள் தாம்.