Quran translations in many languages

Quran in Tamil

At-Tahrim

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[66:1]

நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடிஅல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்மிக்க கிருபையுடையவன்.

[66:2]

அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும்அவன்நன்கறிந்தவன்ஞானம் மிக்கவன்.

[66:3]

மேலும்நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும்அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்அவர் அதில் சிலதை தெரிவித்ததும்சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர் “(யாவற்றையும்) நன்கறிந்தோனும்உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) என்குத் தெரிவித்தான்” என்று (பதில்) கூறினார்.

[66:4]

நீங்கள் இருவரும் – இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன – தவிரநீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால்நிச்சயமாக அல்லாஹ் – அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான்அன்றியும்) ஜிப்ரயீலும்ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும்(அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.

[66:5]

அவர் உங்களை தலாக்‘ சொல்லி விட்டால்உங்களை விடச் சிறந்த – முஸ்லிம்களானமுஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டுநடப்பவர்களானதவ்பா செய்பவர்களானவணங்குபவர்களானநோன்பு நோற்பவர்களான –கன்னிமை கழிந்தவர்இன்னும் கன்னிப் பெண்டிர் – இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு(உங்களுக்குப்) பகரமாகமனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.

[66:6]

முஃமின்களே! உங்களையும்உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்அதன் எரிபொருள் மனிதர்களும்கல்லுமேயாகும்அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.

[66:7]

(அன்று காஃபிர்களிடம்) நிராகரித்தோரே! இன்று நீங்கள் எந்தப்புகழும் கூறாதீர்கள்நீங்கள் கூலிகொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்ததற்குத்தான்.

[66:8]

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்துபாவமன்னிப்புப் பெறுங்கள்உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச்செய்வான்அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்குஎங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.

[66:9]

நபியே! காஃபிர்களுடனும்முனாஃபிக்குகளுடனும் நீர் போரிட்டுஅவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக! அன்றியும் அவர்கள் ஒதுங்குமிடம் நரகமேயாகும்அது மிகவும் கெட்ட சேருமிடம்ஆகும்.

[66:10]

நிராகரிப்பவர்களுக்குநூஹுடையமனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான,; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில்இரு நல்லடியார்களின் மனiவிகளாகவே இருந்தனர்எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்எனவேஅவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லைஇன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.

[66:11]

மேலும்ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காகஉன்னிடத்தில்சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும்அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று(பிரார்த்தித்துக்) கூறினார்.

[66:12]

மேலும்இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும்அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும்அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்)இன்னும்அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.