Quran translations in many languages

Quran in Tamil

At-Tûr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[52:1]

தூர் (மலை) மீது சத்தியமாக!

[52:2]

ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!

[52:3]

விரித்து வைக்கப்பட்ட,

[52:4]

பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!

[52:5]

உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!

[52:6]

பொங்கும் கடலின் மீது சத்தியமாக!

[52:7]

நிச்சயமாக உம்முடைய இறைவன்(விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.

[52:8]

அதனைத் தடுப்பவர் எவருமில்லை.

[52:9]

வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,

[52:10]

இன்னும்மலைகள் தூள் துளாகி விடும் போது,

[52:11]

(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.

[52:12]

எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,

[52:13]

அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.

[52:14]

அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.

[52:15]

இது சூனியம் தானாஅல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?

[52:16]

நீங்கள் அதில் நுழையுங்கள்பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமேநிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த வற்றிற்காகத்தான் நீங்கள் கூலிகொடுக்கப்படுகிறீர்கள்.

[52:17]

நிச்சயமாகபயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.

[52:18]

அவர்களுடைய இறைவன் அவர்களுக்குஅளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் – அன்றியும்அவர்களுடைய இறைவன் நரகவேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.

[52:19]

(அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள்,பருகுங்கள்.”

[52:20]

அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்மேலும்நாம் அவர்களுக்குநீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

[52:21]

எவர்கள் ஈமான் கொண்டுஅவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோஅவர்களுடைய அந்த சந்ததியனரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும்நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் – ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.

[52:22]

இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும்நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.

[52:23]

(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்ஆனால் அதில் வீணுமில்லைகுற்றமிழைப்பதும் இல்லை.

[52:24]

அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள்அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).

[52:25]

அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.

[52:26]

இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.

[52:27]

ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மைகாப்பாற்றினான்.

[52:28]

நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்பெருங்கிருபையுடையவன்.

[52:29]

எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால்நீர் குறிகாரரும் அல்லர்பைத்தியக்காரருமல்லர்.

[52:30]

அல்லது: அவர்கள் (உம்மைப் பற்றி, “அவர்) புலவர்அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்” என்று கூறுகிறார்களா?

[52:31]

நீங்களும் வழி பார்த்திருங்கள் – நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன் என்று (நபியே!) நீர் கூறும்.

[52:32]

அல்லதுஅவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவாஅல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?

[52:33]

அல்லதுஇ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனராஅல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.

[52:34]

ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.

[52:35]

அல்லதுஅவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனராஅல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?

[52:36]

அல்லதுவானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களாஅல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.

[52:37]

அல்லதுஅவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவாஅல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்)அடக்கியாள்பவர்களா?

[52:38]

அல்லதுஅவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களாஅவ்வாறாயின்அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.

[52:39]

அல்லதுஅவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?

[52:40]

அல்லதுநீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டுசுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,

[52:41]

அல்லதுஅவர்களிடம் மறைவானசெய்திகளிலிருந்துஅவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,

[52:42]

அல்லதுஅவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களாஅப்படியானால்அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.

[52:43]

அல்லதுஅவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானாஅவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.

[52:44]

வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால்அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.

[52:45]

ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரைஅவர்களை விட்டு விடுவீர்களாக.

[52:46]

அந்நாளில்அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காதுஅன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

[52:47]

அன்றியும்அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும்அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.

[52:48]

எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திறுப்பீராகநிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,

[52:49]

இன்னும்இரவின் ஒரு பாகத்திலும்நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!