Quran translations in many languages

Quran in Tamil

Qâf

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

 [50:1]

காஃப்கண்ணியமிக்க இக் குர்ஆன் மீது சத்தியமாக!

[50:2]

எனினும்அவர்களிலிருந்தேஅவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்ஆகவேகாஃபிர்கள் கூறுகிறார்கள்இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.

[50:3]

நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மாஇப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).

[50:4]

(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.

[50:5]

இருப்பினும்சத்திய (வேத)த்தை –அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்அதனால்அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.

[50:6]

அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்துஅதை அழகு செய்துஅதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?

[50:7]

மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கிஅதில் உறுதியான மலைகளை அதை;துள்ளோம்மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண்பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும்செய்திருக்கின்றோம்.

[50:8]

(இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.

[50:9]

அன்றியும்வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்துஅதைக் கொண்டு தோட்டங்களையும்அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.

[50:10]

அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட(குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்).

[50:11]

(அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்)மேலும்அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம்இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.

[50:12]

இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும்ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும்ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.

[50:13]

ஆது‘ (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).

[50:14]

(அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும்துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கைஉண்மையாயிற்று.

[50:15]

எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமாஇல்லை. எனினும்இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில்இருக்கின்றனர்.

[50:16]

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

[50:17]

(மனிதனின்) வலப்புறத்திலும்இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-

[50:18]

கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.

[50:19]

மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு(மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)

[50:20]

மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.

[50:21]

அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர்சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.

[50:22]

நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவேஇன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது. (என்று கூறப்படும்).

[50:23]

அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) “இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது” என்று கூறுவார்.

[50:24]

மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.

[50:25]

 

(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி)சந்தேகிப்பவனாகவரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.

[50:26]

ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்” (என்றுங் கூறப்படும்).

[50:27]

(அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்; “எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை ஆனால்அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-

[50:28]

என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன் என்று (அல்லாஹ்) கூறுவான்.

[50:29]

(எனவே என்னுடைய) அச்சொல் “என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை – நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்” (என்றும் அல்லாஹ் கூறுவான்).

[50:30]

நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயாஎன்று நாம் கேட்டுஅதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!

[50:31]

(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும்சமீபமாக்கப்படும்.

[50:32]

இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).

[50:33]

எவர்கள்மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).

[50:34]

ஸலாமுடன் – சாந்தியுடன் – இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்இதுதான் நித்தியமாக நீங்க்ள தங்கியிருக்கும் நாளாகும் (என்று கூறப்படும்).

[50:35]

அவர்கள் விரும்பியதெல்லாம்அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.

[50:36]

அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாளிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம்அழித்திருக்கின்றோம்அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலிரும் (துளைத்துச்) சென்றனர்ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா?

[50:37]

எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோஅல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.

[50:38]

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும்பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.

[50:39]

எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக இன்னும்சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.

[50:40]

இன்னும் இரவிலிருந்தும்ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.

[50:41]

மேலும்சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.

[50:42]

அந்நாளில்உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.

[50:43]

நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்நாமே மரிக்கும்படிச் செய்கிறோம் – அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது.

[50:44]

பூமி பிளந்துஅவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.

[50:45]

அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் – நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர்ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்குஇந்த குர்ஆனை கொண்டு நல்லபதேசம் செய்வீராக.