Quran translations in many languages

Quran in Tamil

Sâd

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[38:1]

ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.

[38:2]

ஆனால்நிராகரிப்பவர்களோ பெருமையிலும்மாறுபாட்டிலும் (ஆழ்ந்து) கிடக்கின்றனர்.

[38:3]

இவர்களுக்கு முன்னர் எத்தனையோதலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்அப்போதுஅவர்கள் தப்பி ஓட வழியில்லாதநிலையில் (உதவி தேடிக்) கூக்குரலிட்டனர்.

[38:4]

அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர் “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காஃபிர்கள் கூறினர்.

[38:5]

இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாராநிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).

[38:6]

(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது” என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.

[38:7]

வேறு (எந்த) சமுதாயத்திலும் நாம் இது (போன்று) கேள்விப்பட்டதில்லை இது (இவருடைய) கற்பனையேயன்றி வேறில்லை (என்றும்).

[38:8]

நம்மில்இவர் பேரில்தான் நினைவுறுத்தும் நல்லுபதேசம் இறக்கப்பட்டு விட்டதோ?” (என்றும் கூறுகிறார்கள்.) அவ்வாறல்ல! அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில் இருக்கின்றனர் அவ்வாறல்ல! இன்னும் அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.

[38:9]

அல்லதுயாவரையும் மிகைத்தவனும் மிகப்பெருங் கொடையாளியுமாகிய உமது இறைவனின் கிருபைக் கருவூலங்கள் – அவர்களிடம் இருக்கின்றனவா,

[38:10]

அல்லது வானங்களுடையவும்பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதாஅவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.

[38:11]

ஆனால் இங்கிருக்கும் படையினரும் (முன் தலைமுறைகளில்) முறியடிக்கப்பட்ட ஏனைய கூட்டங்களைப் போலவே ஆவார்கள்.

[38:12]

(இவ்வாறு) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும்ஆது(சமூகத்தாரு)ம்முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.

[38:13]

(இவ்வாறு) ஸமூதும் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்)இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.

[38:14]

இவர்கள் ஒவ்வொருவரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை எனவே என்னுடைய தண்டனை (அவர்கள் மீது)உறுதியாயிற்று.

[38:15]

இன்னும் இவர்களும் ஒரே ஒரு பேரொளியைத் தவிர (வேறெதனையும்) எதிர் பார்க்கவில்லை. அதில் தாமதமும் இராது.

[38:16]

எங்கள் இறைவா! கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளுக்கு முன்னரேஎங்கள் (வேதனையின்) பாகத்தை துரிதப்படுத்தி(க் கொடுத்து) விடுவாயாக என்றும் (ஏளனமாகக்) கூறுகின்றனர்.

[38:17]

இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும்வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவரகா இருந்தார்.

[38:18]

நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்மாலை வேளையிலும்காலை வேளையிலும் அவைஅவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.

[38:19]

மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.

[38:20]

மேலும்நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்இன்னும் அவருக்கு ஞானத்தையும்தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம்.

[38:21]

அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததாஅவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி –

[38:22]

தாவூதிடம் நுழைந்த போது அவர்அவர்களைக் கண்டு திடுக்குற்றார்அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்எங்களில் ஒருவர் மற்றவர் மீதுஅநீதம் செய்திருக்கிறார்;; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!

[38:23]

(அவர்களில் ஒருவர் கூறினார்😉 “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன் ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லிவாதத்தில் என்னை மிகைத்து விட்டார்.

[38:24]

(அதற்கு தாவூது😉 “உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்நிச்சயமாகக்கூட்டாளிகளில் பெரும்பாலோர் – அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர இத்தகையவர் சிலரே” என்று கூறினார்இதற்குள்; “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.

[38:25]

ஆகவேநாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னித்தோம்அன்றியும்நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும்அழகிய இருப்பிடமும் உண்டு.

[38:26]

(நாம் அவரிடம் கூறினோம்😉 “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்அன்றியும்அனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டுவழிகெடுக்கிறாரோஅவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்துவிட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.

[38:27]

மேலும்வானத்தையும்பூமியையும்இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.

[38:28]

அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான)நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமாஅல்லதுபயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?

[38:29]

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும்அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.

[38:30]

இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்சிறப்பான (நம்) நல்லடியார்நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.

[38:31]

நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது

[38:32]

நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரைஎன்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன் என அவர் கூறினார்.

[38:33]

என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார் அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்.

[38:34]

இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் – ஆகவே அவர்(நம்மளவில்) திரும்பினார்.

[38:35]

என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும்பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பொருங் கொடையாளியாவாய் எனக் கூறினார்.

[38:36]

ஆகவேநாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.

[38:37]

மேலும்ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர்முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;

[38:38]

சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக்கொடுத்தோம்).

[38:39]

இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக் கொடுக்கலாம்அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் – கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).

[38:40]

மேலும்நிச்சயமாக அவருக்குநம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும்அழகிய இருப்பிடமும் உண்டு.

[38:41]

மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனிடம்நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும்வேதனையையும் கொடுத்து விட்டான்” (என்று கூறிய போது);

[38:42]

உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும் (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) “இதோகுளிர்ச்சியான குளிக்குமிடமும்பானமும் (உமக்கு) இருக்கின்றன” (என்று சொன்னோம்).

[38:43]

பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவுட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும்பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்.

[38:44]

ஒரு பிடி புல் (கற்றையை) உம் கையில் எடுத்துஅதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம் (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப்பொறுமையுடையவராகக் கண்டோம்அவர் சிறந்த நல்லடியார் – நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.

[38:45]

(நபியே! ஆத்மீக) ஆற்றலும்அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்றாஹீம்இஸ்ஹாஃக்யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!

[38:46]

நிச்சயமாகநாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்).

[38:47]

நிச்சயமாக இவர்கள் நம்மிடத்தில் தேர்தெடுக்கப்பட்ட நல்லோர்களில் நின்றுமுள்ளவர்கள்.

[38:48]

இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக இஸ்மாயீலையும்அல்யஸவுவையும்துல்கிஃப்லையும் – (இவர்கள்) எல்லோரும்நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.

[38:49]

இது நல்லுபதேசமாக இருக்கும்நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.

[38:50]

அத்னு‘ என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.

[38:51]

அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாகஅங்கே ஏராளமான கனிவகைகளையும்பானங்களையும் கேட்(டுஅருந்திக் கொண்டிருப்)பார்கள்.

[38:52]

அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும்ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.

[38:53]

கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்குவாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.

[38:54]

நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்இதற்கு (என்றும்) முடிவே இராது” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

[38:55]

இது (நல்லோருக்காக) ஆனால் நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் இருக்கிறது.

[38:56]

(அதுவே நரகம்) ஜஹன்னம் -அதில் அவர்கள் நுழைவார்கள்அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது.

[38:57]

இது (தீயோர்களுக்காக) ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் – கொதிக்கும் நீரும்சீழும் ஆகும்.

[38:58]

இன்னும் (இதைத்தவிர) இது போன்ற பல (வேதனைகளும்) உண்டு.

[38:59]

(நரகவாதிகளின் தலைவர்களிடம்😉 “இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்ப்பவர்கள்” (என்று கூறப்படும்).

[38:60]

அதற்கு அவர்கள்; “அப்படியல்லநீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம்எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!” என்று கூறுவர்.

[38:61]

எங்கள் இறைவா! எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காகஅதிகப்படுத்துவாயாக! என்று அவர்கள் கூறுவர்.

[38:62]

இன்னும்அவர்கள்; “நமக்கு என்ன நேர்ந்ததுமிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம்எண்ணிக் கொண்டிருந்தோமேஅவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?

[38:63]

நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமாஅல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம்பார்வைகள் சருகி விடடனவாஎன்று கூறுவர்.

[38:64]

நிச்சயமாக இது தான் உண்மை. நரகவாசிகள் (இவ்வாறு தான்) ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள்.

[38:65]

(நபியே!) நீர் கூறுவீராக “நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனேஅன்றியும் ஏகனும், (யாவரையும்) அடக்கியாளபவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை.

[38:66]

(அவனே) வானங்களுக்கும்பூமிக்கும்இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்அவன் (யாவரையும்) மிகைத்தவன்மிகவும் மன்னிப்பவன்.

[38:67]

(நபியே?) கூறுவீராக “(நான் உங்களுக்கு எடுத்துரைக்கும்) இது மகத்தான செய்தியாகும்.

[38:68]

நீங்களோ அதைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறீர்கள்.

[38:69]

மேலான கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

[38:70]

நிச்சயமாக நாம் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் என்பதற்காக அல்லாமல் எனக்கு வஹீ அறிவிக்கப்படவில்லை.

[38:71]

(நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நாம் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்;

[38:72]

நான் அவரைச் செவ்வைப்படுத்திஎனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள் (எனக் கூறியதும்);

[38:73]

அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.

[38:74]

இப்லீஸைத் தவிர அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.

[38:75]

இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத்தடுத்தது எதுபெருமையடிக்கிறாயாஅல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயாஎன்று (அல்லாஹ்) கேட்டான்.

[38:76]

நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய் என்று (இப்லீஸ்) கூறினான்.

[38:77]

(அப்போது இறைவன்) “இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகிவிட்டாய்” எனக் கூறினான்.

[38:78]

இன்னும்நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும் (எனவும் இறைவன் கூறினான்).

[38:79]

இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக என்று அவன் கேட்டான்.

[38:80]

நிச்சயமாக நீ அவகாசம் சொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே என (அல்லாஹ்) கூறினான்.

[38:81]

குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில் (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்.

[38:82]

அப்பொழுது “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாகநிச்சயமாக நான் அவர்கள் யாவரையும்வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.

[38:83]

(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர (என்றான்).

[38:84]

(அதற்கு இறைவன்😉 “அது உண்மை உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.

[38:85]

நிச்சயமாகஉன்னைக் கொண்டும்அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன் (என்றான்)

[38:86]

(நபியே!) நீர் கூறும்; (“இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லைஅன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.

[38:87]

இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.

[38:88]

நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர்நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொளவீர்கள்.