Quran translations in many languages

Quran in Tamil

Ya-Sîn

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[36:1]

யாஸீன்.

[36:2]

ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!

[36:3]

நிச்சயமாகநீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.

[36:4]

நேரான பாதை மீது (இருக்கின்றீர்).

[36:5]

(இது) யாவரையும் மிகைத்தோன்கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.

[36:6]

எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள்எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.

[36:7]

இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நி;ச்சயமாக உண்மையாகிவிட்டது ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.

[36:8]

நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில்அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம்ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.

[36:9]

இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் – ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.

[36:10]

இன்னும்அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.

[36:11]

நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.

[36:12]

நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்அன்றியும் (நன்மைதீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும்அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்எல்லாவற்றையும்நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.

[36:13]

(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.

[36:14]

நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோதுஅவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்ஆகவே (அவர்களை)மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்ஆகவே, “நிச்சயமாக நாங்கள்உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.

[36:15]

(அதற்கு அம்மக்கள்😉 “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.

[36:16]

(இதற்கு அவர்கள்😉 “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்” என்று கூறினர்.

[36:17]

இன்னும்எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (என்றும் கூறினார்).

[36:18]

(அதற்கு அம்மக்கள்😉 கூறினார்கள்; “நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக்கல்லாலடிப்போம்மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும்பிடித்துக் கொள்ளும்.

[36:19]

அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்; “உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.

[36:20]

(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); “என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.

[36:21]

உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள் (என்றும் அவர் கூறினார்).

[36:22]

அன்றியும்என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன(காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.

[36:23]

அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனாஅர்ரஹ்மான் எனக்கு ஏதேனும்கெடுதியைக் கொண்டு நாடினால்இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியா.

[36:24]

(எனவேநான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாகவெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.

[36:25]

உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்ஆகவேநீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்.

[36:26]

(ஆனால்செவிசாய்க்காது அவரைக்கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக‘ என்று (அவரிடம்) கூறப்பட்டது.என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.

[36:27]

என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்துகண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான் (என்பதை).

[36:28]

தவிரநாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.

[36:29]

ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.

[36:30]

அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும்அவரை அவர்கள் பரிகாசம்செய்யாதிருந்ததில்லை.

[36:31]

அவர்களுக்கு முன்னர் எத்தனையோதலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்நிச்சயமாக அவர்கள்இவர்களிடம் திரும்பிவரவேமாட்டார்கள் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?

[36:32]

மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.

[36:33]

அன்றியம்இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்துஅதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.

[36:34]

மேலும்அதில் நாம் பேரீத்த மரங்களினாலும்திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.

[36:35]

அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை – ஆகவே அவர்கள் நன்றிசெலுத்தமாட்டார்களா?

[36:36]

பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும்இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

[36:37]

இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்அதனால் இவர்கள் ஆழ்ந்தஇருளிலாகிவிடுகிறார்கள்.

[36:38]

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும்யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் வித்ததாகும்.

[36:39]

இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.

[36:40]

சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

[36:41]

இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சிநாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.

[36:42]

இன்னும்அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.

[36:43]

அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்மேலும்அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.

[36:44]

நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி),

[36:45]

இன்னும்நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டுஉங்களுக்குமுன் இருப்பதையும்உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும்

[36:46]

அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புற்ககணிக்காமல் இருப்பதில்லை.

[36:47]

அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன்உணவளித்திருப்பானோஅவர்களுக்கு நாம் உணவளிப்போமாநீங்கள் பகிரங்கமானவழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.

[36:48]

இன்னும்அவர்கள் கூறுகிறார்கள்; “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?” என்று.

[36:49]

அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.

[36:50]

அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

[36:51]

மேலும்ஸூர் ஊதப்படடதும்உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

[36:52]

எங்களுடைய துக்கமே! எங்கள்தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்என்று அவர்கள் கேட்பார்கள்அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

[36:53]

ஒரே ஒரு பேரொளி தவிர (வேறொன்றும்) இருக்காது உடன்அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.

[36:54]

அன்றியும்அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதம் அநியாயம் செய்யப்பட மாட்டாது இன்னும்நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

[36:55]

அந்நாளில்நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

[36:56]

அவர்களும்அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்தவர்களாக இருப்பார்கள்.

[36:57]

அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டுஇன்னும் அவர்களுக்க அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.

[36:58]

ஸலாமுன்‘ என்றுநிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.

[36:59]

அன்றியும்; “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).

[36:60]

ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்மான பகைவன் என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?

[36:61]

என்னையே நீங்கள் வணங்க வேண்டும்இதுதான் நேரானவழி.

[36:62]

அவ்வாறிருந்தும்நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?

[36:63]

இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம் (நரகம்) ஆகும்.

[36:64]

நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).

[36:65]

அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.

[36:66]

நாம் நாடியிருந்தால்நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?

[36:67]

அன்றியும்நாம் நாடியிருந்தால்அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போதுஅவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்இன்னும் அவர்கள் மீளவும்மாட்டார்கள்.

[36:68]

மேலும்எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோஅவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?

[36:69]

(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை அது அவருக்குத் தேவையானதும் அல்ல இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.

[36:70]

(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.

[36:71]

நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையாஅவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.

[36:72]

மேலும்அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்ஆகவேஅவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.

[36:73]

மேலும்அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும்பானங்களும் இருக்கின்றனஇவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

[36:74]

எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் – தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

[36:75]

ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக்கொண்டுவரப்படும்.

[36:76]

(நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பபதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

[36:77]

மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையாஅவ்வாறிருந்தும்அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.

[36:78]

மேலும்அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டுஅவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.

[36:79]

முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன் என்று (நபியே!) நீர் கூறுவீராக!

[36:80]

பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனேஅதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.

[36:81]

வானங்களையும் பூமியையும் படைத்தவன்அவர்களைப் போன்றவர்களபைபடைக்கச்சக்தியற்றவனாஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவேஅவனே (பல வகைகளையும்) படைப்பவன்யாவற்றையும் நன்கறிந்தவன்.

[36:82]

எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால்அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்குன்” (ஆகிவிடுக) என்று கூறுவதுதான்உடனே அது ஆகிவிடுகிறது.

[36:83]

ஆகவேஎல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன்அவனிடமே நீங்கள்மீள்விக்கப்படுவீர்கள்.